April 19, 2024

கேபி கோத்தாவுடன் பிசி?

அரசாங்கம் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே.பி எனும் குமரன் பத்மநாதன பயன்படுத்துவதாக முன்னாள் பாராளுமன்ற எம்பி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார். மேலும்,
“கிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச் எெல்வது முறையற்றது.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
அவ்வாறிருக்கையிலேயே கே.பியும் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதி கருணாவும் பொதுஜன பெரமுனவிற்காகத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றார்கள்” – என்றார்.