März 28, 2024

புதுக்குடியிருப்பில் எழுச்சியுடன் மக்கள் முன்னணியின் விடுதலை அரசியற் படையணி

தமிழ்த்தேசியமக்கள்முன்னணி.கூடுமிடமெங்கும் மக்கள் எழுச்சி விண்ணைப்பிளக்கின்றது. வீழ்ந்திடாத வீரம் மீண்டெழுந்தது என மக்கள் குதூகலிக்கின்றனர்.

விடுதலைப்பாதையை விட்டு விலகிய கயவர்களின் வாக்கு வங்கி  சரிகிறது பாரீர், நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து நில்லடா என்னும் புரட்சிக்கானம் காதில் ஒலிக்கிறது. காலங்காலமாக அடிமைச்சாசனம் எழுதிய சிங்கள அடிவருடிகளின் கொட்டம் அடங்கியது. வீழ்வோம் என நினைத்தாயோ ! ஈனப்பிறவியே ! வீரமறவர்களின் வழித்தோன்றல் நாமென வீதியெங்கும் வீரமுரசு அறைந்தனர் முன்னணி விடுதலைப் பேரொளிகள்.