März 28, 2024

வவுனியா இரு கட்சியினர் இடையே மோதல்! ஆறுபேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின் ஆதரவாளர்கள் சாளம்பைக்குளம் பகுதியில் ஒருவரை சந்திப்பதற்காக வீட்டிற்கு சென்றிருந்தனர்.

குறித்த வீட்டடிக்கு வந்த ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் தம்மீது தாக்குதல் நடாத்தினர் இதனால் தமது ஆதரவாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், தமது வாகனங்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டதாக மஸ்தான் ஆதரவாளர்கள் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் தங்களது கிராமத்தில் அரசியல் நடைவடிக்கைகள் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டுவதை மக்கள் விரும்புவதில்லை. ஆனால் மஸ்தானின் ஆதரவாளர்கள் சுவரொட்டியை ஒட்ட முற்பட்ட போதே அதைத் தடுத்த போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இரு தரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அதிரடிப் படையினர் இரண்டரை மணிநேரத்தின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.