März 29, 2024

பிரிவோம்- சந்திப்போம்.

என் இனிய நண்ப!

பிரிவுச் செய்தி கிடைத்தது. நாம் உறவாடிக் களித்தபொழுதுகள் நினைவில் மேலெழுந்து உள்ளத்தை வதை செய்தாலும் எல்லா உறவுகளும் ஒருநாள் பிரிவில்தானே முற்றுப் பெற்றாகவேண்டும் என்று மனதைச் சமாதானப் படுத்த முயல்கிறேன். ஆனால் இந்தத் தத்துவம் எல்லாம் உண்மை அன்பில் உருகும் உள்ளத்துக்கு உதவப்போவதில்லை. என் விழிகளில் உனக்காக வழியும் கண்ணீரே என் நினைவுப்பரிசாகத் தந்து உன்னை வழியனுப்புகிறேன். மரணம் உனக்கு மட்டுமே சொந்தமானதல்ல. எனக்கும் தான். நாம் மறுபடியும் சந்தித்துக்கொள்ளலாம். அதுவரை உன் ஆன்மசாந்திக்காக என் இறைவனை இறைஞ்சுகிறேன்.
ஓம். சாந்தி:

உன் அன்பில் கலந்த
இந்துமகேஷ்.