März 29, 2024

முழுமையாக எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்! மைத்திரிபால சிறிசேன சபதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலின் பின்னர் பொலன்நறுவையின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

தான் பொலன்நறுவைக்கான அபிவிருத்திட்டங்களை உருவாக்கும் போது உள்ளாடைக்குள் கழிவை அகற்றுவோர் அரசியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தான் பொலன்நறுவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெறுவேன் எனவும் சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.