பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில், அவர் தலைமையில் திருமணம் நடத்த தினகரன் பரபரப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு சசிகலா, அடுத்த மாதம் விடுதலையாவார் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லை என்றாலும், அவர் வரும் ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதி.

இதையடுத்து தற்போது அதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமநாதன் வாண்டையாருக்கும், டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் நேற்று எளிமையான முறையில் நிச்சயம் நடைபெற்று முடிந்தது.