April 19, 2024

மூட்டைகளுடன் சீன தூதரகத்தை விட்டுச் சென்ற ஊழியர்கள்!

சட்டப் போராட்டத்தில் சாதித்த நாம் தமிழர் கட்சி.. ஆபத்திலிருந்து தப்பிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் By Veerakumar | Updated: Saturday, July 25, 2020, 20:02 [IST] சென்னை: சத்தமில்லாமல் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது நாம் தமிழர் கட்சியின், சுற்றுச்சூழல் பாசறை. ஆம்.. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஏற்படவிருந்த பெரிய பாதிப்பை, சட்டப் போராட்டத்தின் மூலம், தடுத்து நிறுத்தியுள்ளது அக்கட்சி. ஹைகோர்ட் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில செயலாளர் வெண்ணிலா தாயுமானவன், தாக்கல் செய்த மனுவின் விசாரணையின்போதுதான், வேடந்தாங்கல் சரணாலயம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அப்படி என்ன நடந்தது. இதோ நாம் தமிழர் கட்சியின் அறிக்கையின் வாசகங்கள் வாயிலாகவே அதைப் பார்க்கலாம் வாருங்கள்: