März 28, 2024

படவாய்ப்பில்லாமல் கணவருடன் இந்த தொழில் ஆரம்பிக்கும் நடிகை ஜெனிலியா..

தமிழ் சினிமாவில் பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் பாலிவுட் பக்கம் சென்று முன்னணி நடிகைகள் இடத்தை பிடித்து நடித்து வந்தார்.

2012ல் பிரபல நடிகர் ரித்தீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்த்து வந்த ஜெனிலியா இரு ஆண் பிள்ளைகளை பெற்றார்.

சில ஆண்டுகளில் இருவருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சர்ச்சையில் இருந்தனர். ஆனால் தற்போது குழந்தைகளுக்காக சமரசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

கொரானா லாக்டவுன் என்பதால் படபிடிப்புகள் இல்லாததால் சமயல் சம்பந்தமான புதிய தொழிலை செய்ய முடிவெடுத்துள்ளார் ஜெனிலியா. ரித்தீஷுடன் சேர்ந்து காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட சைவ உணவுகளை கொண்டு அசைவ ருசியில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

துவக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர் ஜெனிலியாவும் அவரது கணவரும்.