April 19, 2024

சுகாதார பரிசோதகர்கள் போராட்டம் மும்முரமாகின்றது?

கொரோனா தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

தமக்கான தொழில்சார் பாதுகாப்பினை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ள அவர்கள் தற்போது சுகவீன போராட்டத்தில் குதித்துள்ளமை தேர்தல் வாக்களிப்பினை பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே இவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றுடன் ஒன்பதாவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.