März 29, 2024

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது..

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை பிரித்தானியா நீக்கியுள்ளது. அதற்கமைய, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளமையே இதற்கு காரணமாகும். மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரித்தானியா பல்வேறு நாடுகளுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.