April 23, 2024

அங்கயன் குழு தலையிடியென்கிறது முன்னணி?

ஆவாக்குழுக்களை தோற்றுவித்து இளைஞர்களை சீரழிக்கும் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து நள்ளிரவில் அட்டகாசம் செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.
தமது தலைமைச் செயலகத்தின் வாசல் கதவுகளை உடைத்து அக்கதவுகளில் தங்களது போஸ்டர்களை ஒட்டியும், அலுவலகத்தில் இருந்த ஏனைய பொருட்கள் சிலவற்றையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
எம் மண்ணில் மக்களை நிம்மதியாக வாழவிடாது அடியாள் அரசியல் கலாச்சாரம் மூலமாக சிங்கள பேரினவாத நிகழ்ச்சிநிரலில் எம் மண்ணை அழிக்கும் அங்கஜன் போன்ற முகவர்களை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாது வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும் என முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.