April 25, 2024

வவுனியாவில் எறிகணைகள் மீட்பு!

வவுனியா ஒமந்தை, குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளதாக  ஒமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த மோட்டர் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

குஞ்சுக்குளம் பகுதியை சேர்ந்த பிரதேசவாசி தனது விவசாய கிணற்றினை நீர் இறைத்து கிணற்றினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது கிணற்றினுள் வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து ஒமந்தை காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து ஒமந்தை காவல்துறையினர் ஊடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்று புளியங்குளம் விசேட அதிரடிப்படையினரால் குறித்த கிணற்றிக்குள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கிணற்றிலிருந்து 14 மோட்டார் எறிகணைகள் மீட்கப்பட்டன. அவை 81 ரக மோட்டார் எறிகணைகள் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த எறிகணைகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.