April 24, 2024

வெள்ளை வான் ஜனாதிபதியுடன் இணக்கத்தில் கூட்டமைப்பு!

 
தமிழ்தேசியம் பேசியவர்களும் இன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவாக செயற்பட்டவர்களும்  மீண்டும் வெள்ளை வான் வரும் கொலைகாரர்கள் என்று சொன்ன அதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுக்கலாமா என்று ஆராய்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மாகாணத்தில் போர் முடிவடைந்ததை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி மிகக் கொடூரமாக எங்களுடைய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு,  அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைக்கு பல்வேறுவிதமான அரசாங்கத்தினுடைய கெடுபிடிகள் இதுவரை தமிழ்தேசியம் பேசியவர்களும் இன்றைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவாக செயற்பட்டவர்கள்.
  மீண்டும் வெள்ளை வான் வரும் கொலைகாரர்கள் என்று சொன்ன அதே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் மஹிந்த ராஜபக்ச உடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை எடுக்கலாமா என்று ஆராய்கின்ற ஒரு நிலைமையை பார்க்கக் கூடியதாக உள்ளது ஆகவே இந்த வடக்கு கிழக்கிலே இந்த தமிழீழத்தில் ஒரு நடைமுறை அரசாங்கத்தை சர்வதேசம் திரும்பிப் பார்க்கக் கூடிய விதத்திலே இந்த மண்ணை கொழும்புக்கு அடுத்ததாக கிளிநொச்சி ஒரு தலைநகராக பலநாட்டு தூதுவர்களும் பிரதிநிதிக்கும் வருவது போன்று  இருந்த நிலைமை மாற்றப்பட்டு இன்றைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உடைய தேர்தல் அறிக்கையிலே ஒஸ்லோ உடன்படிக்கை  2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு தகவல் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டது.
அதை உடன்படிக்கை என்று கொச்சைப்படுத்த கூடிய விதத்திலே மாட்டின் வீதியிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகளுடைய பங்களிப்போடு தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை இந்தப் போராட்டத்தை  ஏற்றுக் கொள்ளவில்லை இருக்கின்றோம் என்று திரு சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்.
 அதே சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கும் திரு சிறிதரன் அவர்கள் 2015 ஆம் ஆண்டு வவுனியாவில் ஒரு தனியார் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கூட்டத்திலேயே நான் முன் வரிசையில் இருந்தேன் 12000 சரணடைந்த புலிகளும் சயனட் அடித்து இறந்திருக்க வேண்டும் இவர்கள் புலிகள் இல்லை கூறினார்.
மிகவும் மிலேச்சத்தனமான அந்தப் 12 ஆயிரம் உயிர்களை இவர்களுடைய குடும்பங்களை இன்றைக்கு அவர்கள் கொல்லப்பட்டிருக்க வேண்டும் அவர்களுடைய உயிர்களை அவர்கள் மாய்த்திருக்க வேண்டும்  எனக் கூறிய ஸ்ரீதரன் இன்றைக்கு வாக்கு  கேட்டு வந்துள்ளார். அதற்கு சில முன்னாள் போராளிகள் பின்னால் திரிகிறார்கள்.
நாங்கள் கேட்க விரும்புவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மே மாதம் 16ஆம் தேதி 2009 ஆம் ஆண்டிலே தங்களுடைய ஆயுதப்போராட்டத்தை  மௌனிகின்றோம் என்று சொன்னதன் பின்  அவர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை அதை நம்பித்தான் ராணுவத்திடம் சரண் அடைந்தார்கள் வெள்ளைக்கொடியுடன் வந்தார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது பல பத்தாயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் ஒரு   நிலமை இருந்து கொண்டிருக்கின்றது  எல்லாவற்றுக்கும் மேலாக இந்த மண்ணிலே விடுதலைப்  போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மிகத் தீவிரமாக வன்னியை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருந்தபொழுது கிழக்கு மாகாணத்திலே பெரும்பகுதியை வைத்துக் கொண்டிருந்த போது இந்தப் போராட்டத்திலே தங்களது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த  நிறைய பேர் இருக்கிறார்கள்.
  அதைப்போலவே வன்னி மண்ணிலே ஆயிரக்கணக்கான மாவீரர்கள் இந்த மண்ணிலே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உறங்கிக்கொண்டிருக்கும் மாவீரர்களே மலையகத் தமிழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன நிலமையிலே  வடக்கத்தையான், தொட்டக்காட்டான்  என்று  சொல்லுகின்ற மிகவும் அற்பத்தனமான ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு நீங்கள் வாக்களிக்க தான் வேண்டுமா 1977 ஆம் ஆண்டிலே திறக்கப்பட்ட பொழுது நாங்கள் அப்போது இளைஞர்களாக இருந்தபொழுது பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து வன்னிப் பகுதியிலே குஞ்சுக்குளம் பார்வையிலே மக்களை குடியேறிய பொழுது மூன்று மாதங்கள் காட்டுக்குள்ளேயே தங்கியிருந்து குடியேற்றங்களை மேற்கொண்டோம்.
1983 ஆம் ஆண்டும் அவர்களை  குடியேறினோம்.  இன்றைக்கு அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே ஒழிய வந்தேறு குடிகள் அல்ல அவர்களில் இன்று இல்லையென்றால் போராட்டமும் இருந்திருக்காது இந்த பிரதேசமும் பாதுகாக்கப்பட்டு இருக்காது என்பதை இன்றைக்கு 95 ஆயிரம் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய கிளிநொச்சி மாவட்ட தொகுதியிலேயே தன்னைத் தானே கிளிநொச்சி மாவட்டத்தின் உடைய எம்பியாக கூறுகின்ற   ஸ்ரீதரனுக்கு எவ்வாறு அந்த நம்பிக்கை அவனுக்கு வரும்.
இன்றைக்கு இந்தத் துரோக கும்பல் புலிகள் விடுதலைப் போராட்டத்தை ஏற்க்கவில்லை,  12 ஆயிரம் போராளிகள் தங்களை சைட் அடித்து  இறந்திருக்க வேண்டும் என்று   கூறியவர்கள் இருவரும் இணைந்திருக்கிறார்கள் நல்ல ஜோடி ஆனால் இவர்களுக்கு ஓஸ் மாதம் ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலிலே தமிழ் மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கப் போகிறார் என்பதை அண்மையிலே கடந்த 4 வருடங்களுக்குள்ளே  நடைபெற்ற தபால்மூல வாக்கு எவ்வாறு அளிக்கப்பட்டது என்பதை  தெட்டத்தெளிவாக காட்டுகின்றது.
இரண்டாவது நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நல்ல படமா அல்லது மூன்றாம் நிலைக்கு தள்ளப்படும் என்ற கேள்வி எழுகின்றது 5 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆக குறைந்தது மூவர் தோற்கடிக்கப்படுவது  உறுதியாக  உள்ள  மேலவையில் என்ன செய்யப்போகிறார்கள் வீடு தீப்பற்றி எரிகிறது எங்கே பாயப் போகிறார்கள்.
  இன்றைக்கு சொல்லுகிறார்கள் தலைவர் சுட்டிக்காட்டிய வீடு  கேட்க விரும்புகின்றேன் வீடு தீப்பற்றி எரிகிறது வீட்டுக்குள்ள இப்பொழுது சினிமாவில் நடைபெறுகின்ற big boss  விட  மோசமாக முகப்புத்தகத்தில் திருமதி ரவிராஜ் அழுது கொண்டிருக்கிறார் தனக்குத் துரோகம் நடப்பதாக தன்னை ஓரம் கட்டுவதாக சொல்கின்றார் பேப்பர் முதலாளி சரவணபவன் ஐயா ஒரு பக்கம்   சுமந்திரன் அடுத்தபக்கம் மாவை சேனாதிராஜா என்ன அடுத்த பக்கம் அவருக்கு முதுகெலும்பு இருந்தால்தானே அவருக்கு செய்ய முடியும் அவர் உயரமான மனிதன் அவ்வளவுதான் அதை வைத்துக் கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்.
 நீங்கள் நினைப்பதைப் போன்று தலைவர் காட்டிய அடையாளம் என்றால் 2002ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உடைய 15 எம்பிக்கள் வன்னியிலே கிளிநொச்சியில் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த பொழுது  கருணாவையும் சந்தித்தேன்.
 நாங்கள் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஊடகத்தின் வாயிலாக கருணாவுக்கு வெற்றி நிச்சயம் ஜெயசிக்குறு நடவடிக்கை ஈடுபட்டதற்காக தலைவர் பாராட்டி விருதுகளை வழங்கி இருந்தார் தலைவர் விருது வழங்கினார் என்பதற்காக  இன்றைக்கு கருணாவை ஏற்றுக்கொள்ள முடியுமா இல்லை அதேபோல்தான் தலைவர் சுட்டிக்காட்டிய வீடு இன்றைக்கு அது வீடு வீடாக இல்லை தீப்பற்றி எரிகிறது அங்கே குத்து வெட்டுக்களும், கூச்சல்களும்  அங்கே இருந்து கொண்டிருக்கின்றன.
 அங்கு இருக்கக்கூடிய பலர் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பல கிராமங்களிலே நீங்கள் கூட்டமைப்பா  வீட்டுக்குள் வராதீர்கள் கிராமத்துக்குள் வராதீர்கள் கூட்டங்களை நடத்த முடியாத ஒரு நெருக்கடி நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது  இந்த சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சர்வதேச ரீதியாக இனப்படுகொலையை இல்லை என்று கூறியவர்கள் இப்போது அவர்களது தேர்தல் அறிக்கையில் இனப்படுகொலையை பற்றி சொல்லுகிறார்கள் வெட்கம், ரோசம், மானம்  இருக்கின்றதா தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அவர்கள் இடைக்கால அறிக்கை ஒன்றை கொண்டிருந்தார்கள் அதிலே அவர்கள் அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.
 ஏனென்றால் அது ஒரு பெரிய மோசடி அந்த மோசடியை எப்படி சொல்ல முடியும் அங்கே ஒருமித்த நாடு என்றார்கள்  சிங்களத்திலே ஏக்கியராச்சிய என்றார்கள்  ஆங்கிலத்திலும் ஒருமித்த நாடு என்றார்கள் ஆங்கிலத்திலே ஒரு அரசியல் முறைக்கு சொல் இல்லாத  சுத்துமாத்து செய்த சுமந்திரன் போன்றவர்கள்.
  சுத்து மாத்துபவர்களுக்கு  நீங்கள் வாக்களிக்கப் போகிறார்களா தமிழ் தேசியம் அளிக்கப்படுவதற்கு நீங்கள் யானை வழங்கப் போகிறீர்களா இல்லையா இந்த தமிழ் தேசியத்தை அழித்து கொண்டிருக்கக்கூடிய இந்த முக்கியஸ்தர்கள் சம்பந்தன் திருகோணமலையில் தோற்கடிக்க கூடிய நிலைமை மிக வேகமாக  அங்கே பூகம்பங்களும் அதிர்ச்சிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
 நாங்கள் பலதடவை திருகோணமலை பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி இருக்கின்றோம் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இன்னும் இரண்டு தடவைகள்  அதைக் கட்ட பிரச்சாரங்களுக்கு சென்று அங்கும் நாங்கள் வெற்றி வாகை சூடுவோம்.
 ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி வாக்குச் சீட்டுக்கள் எண்ணப்படும் பொழுது திரு விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உன்னுடைய பாராளுமன்ற  உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளே பிரவேசிப்பதை இந்த உலகம் பார்க்கத்தான் போகின்றது இந்த விடயத்தில் தமிழ் மக்கள் அவளுடைய உறுதியான தீர்ப்பை மீன் சின்னத்திற்கு நேரே புள்ளடி கேட்டு வெற்றி பெற   செய்ய வேண்டும் வெற்றி நிச்சயம் என்கின்ற நிலைமையிலே நாங்கள் போராடுவோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.