April 19, 2024

போட்டுக்கொடுத்தார் கிளிநொச்சி ஜமீன்?

நேற்று சனிக்கிழமை மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  பிரச்சார நடவடிக்கைகளுக்கு  கிளிநொச்சி சென்று கரடிப்போக்கு சந்தியில் இருந்து A9 வீதியூடாக கிளிநொச்சி சந்தை வரையிலான பிரச்சாரம்  தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்  வேட்பாளர்களான  விக்கினேஸ்வரன்,  ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம்  அவர்களது படங்கள் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அங்கத்துவ கட்சியான  தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவாளர்களால் வினியோகம் செய்யப்பட்டது.
 போலீசாரின் குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர்களது அலுவலகத்திற்க்கு  அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்து சிறிது நேரத்தின் பின்னர்  விடுதலை செய்யப்பட்டார்கள்  .
 வீதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியாத என  போலீசாரின் குற்றத் தடுப்புப் பிரிவினரால்   எச்சரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்தார்கள்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட அதே இடத்தில் இருந்து  எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் தொடர்ந்தும் துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இவர்களது கைதின் பின்னணியில் அரச சார்பான பிரபல அரசியல் வாதியின் தலைமையிலான  சுயேட்சை குழுவின் தூண்டுதலே இதற்க்கு காரணம் என தமிழ்த் தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளனர்.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணைக் குழுவிற்க்கும், தேர்தல் கண்காணிப்பு குழுவினர்களுக்கும் முறைப்பாடுகள் செய்யப்படவுள்ன.