April 25, 2024

யாழ்.தளபதி அனுமதித்தாலே நல்லூர் திருவிழா?

வரலாற்று புகழ் மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியுடன் பேசி அனுமதியை பெற்று திருவிழா நடத்த இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இம்முறை நல்லூர் ஆலய உற்சவத்தினையே யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நல்லூர் உற்சவத்தினை நடாத்த முடியும் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்  சவேந்திர சில்வா இன்று புங்குடுதீவு வந்திருந்த நிலையில் அரச ஆதரவு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போதே யாழ்.மாவட்ட இராணுவ தளபதி அனுமதி பெற்று திருவிழாவை நடத்த  அவர் அனுமதித்துள்ளார்.