April 19, 2024

கொரோனா கட்டுப்பாட்டு செயற்பாட்டிலிருந்து சுகாதார பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா கட்டுப்பாட்டு செயற்திட்டத்திலிருந்து விலகுவதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று மதியம் 12.30 மணி முதல் கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மக்கள் இன்னல்களை சந்திக்காமலிருப்பதற்காக, பொதுச்சுகாதார பரிசோதர்களிற்கு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரம் வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.