April 24, 2024

நாமல் ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி! ஜோன்ஸ்டன்

நாமல் ராஜபக்ஷ எனறோ ஒருநாள் இலங்கையின் ஜனாதிபதியாவது உறுதி என அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார்.

‘நாமல் ராஜபக்ஷ இந்நாட்டின் தலைமையை ஏற்றால், அவர் மகிந்த ராஜபக்ஷவை விடவும் அதிசிறப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவார் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருணாகல் மாவட்டத்தில் இடமபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் தான் 2010 ஆம் ஆண்டே நாமல் ராஜபக்ஷவின் திறமைகளைக் கண்ணாரக் கண்டதாகவும், அவர் தூரநோக்குடைய ஒரு அரசியல்வாதி என்றும் ஜோன்ஸ்டன் பிரனாந்து கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.