April 20, 2024

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல்- 16 மாவட்டங்களில் 3000 பேர் தனிமைப்படுத்தலில்

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 16 மாவட்டங்களில் 3000க்கும் அதிகமானவர்கள் தற்சமயம் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தனபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், கோலை, மொணராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படுவதாகவும் அந்த சங்கம் மேலும் கூறுகின்றது.