April 18, 2024

துயர் பகிர்தல் திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)

தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்

.

அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி அஞ்சுகம் தம்பதிகளின் அன்பு மகளும், இரத்தினம் செந்தில்வேல் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற வயலின் வித்துவான் கேசவமூர்த்தி, இதயமூர்த்தி (ராகவன் TRTதமிழ் ஒலி நேயர்) பிரான்ஸ், ஜெயரஞ்சினி, ஜெயரூபி, ஆகியோரின் அன்புத்தாயாரும் காலம் சென்ற சிவபாதரத்தினம், ராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், காந்தமணி, சிவகாமி ஆகியோரின் அன்பு மாமியாரும் , வள்ளிநாயகி முருகையாவின் அன்பு மைத்துனியும், ரமேஷ், ரவிதாஸ், ரகுதாஸ், முருகதாஸ், வனஜா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் , சிவசாமி, சிவ சிவ, சிவமயம், ஆகியோரின் அன்பு மாமியாரும் ஜெனகன், தணிகன், மேனன், நிலாங்கி, ஆரோகணா, வர்மன், வாசகி (பிரான்ஸ்) தர்சினி ஆகியோரின் பேத்தியும் பவிசாலியின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15ம் திகதி ஜூலை மாதம் புதன் கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கேணிப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
இராகவன் (மகன்) பிரான்ஸ்
0033 7 71 71 20 40

இப் பிரிவுத்துயரில் TRTதமிழ் ஒலி குடும்பமும்
பங்கெடுத்துக்கொள்வதோடு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்