April 23, 2024

தமிழரின் நலன்களுக்காக அதிகமான சேவைகளை செய்வோம்! சுசில் பிரேமஜயந்த….

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளைச் செய்துள்ளதுடன் , எதிர்வரும் காலத்தில் இதனைவிட அதிகமான சேவைகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு – சங்கராம மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்

கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்னின்று செயற்படுவதுடன், அனைத்து இனமக்களும் சமமாகவும் , பாதுகாப்புடனும் வாழக் கூடிய நிலைமையைக் கொழும்பில் ஏற்படுத்துவோம்

பொதுத் தேர்தலில் எமக்கு ஆதரவினை பெற்றுக் கொடுப்பதற்காக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினர் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு வாழ் தமிழ்பேசும் மக்களுக்காக அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொடுக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.