April 25, 2024

வங்கி கடன் பெற்ற இலங்கையர்களுக்கு வெளியாகிய முக்கிய தகவல்!

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசாங்கம் வழங்கிய சலுகைக் காலத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்தாத கடன் தவணை பணத்திற்கு வட்டி அறவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது. அவ்வாறு செலுத்தாத தவணை பணத்திற்கு மேலதிகமாக நூற்றுக்கு 7 சதவீத அதிகபட்ச வட்டியை வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

புதிய நிதி கொள்கை மதிப்பாய்வு தொடர்பில் கருத்த வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட தலைவர் நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, கடனை புதுப்பித்து மாத்திரமே இந்த மேலதிக வட்டியை அறவிட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.