வெலிக்கடை சிறைச்சாலைன் 315 கைதிகளிற்கும் கொரொனா இல்லை!

வெலிக்கடை சிறைச்சாலைன் கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 31 கைதிகளிற்கு கொரோனா தொற்று எற்படவில்லையென்பது தெரிய வந்துள்ளது.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டிருந்த ஒரு கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதையடுத்து கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கைதிகள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியாகியுள்ளது.

தொற்றிற்குள்ளான கைதி எவ்வாறு கொரொனாவால் பீடிக்கப்பட்டார் என்பது தெரியவில்லையென்றும், அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.