März 27, 2024

துயர் பகிர்தல் ஜெயஸ்ரீ வேதநாயகம்

யாழ். அனலைதீவு பூநகரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ  வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயஸ்ரீ வேதநாயகம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், பூநகரியைச் சேர்ந்த கந்தையா சின்னம்மா தம்பதிகள், அனலைதீவைச் சேர்ந்த சரவணமுத்து பறுவதம் தம்பதிகள், நமசிவாயம் சின்னாச்சி தம்பதிகள், நடராசா பார்வதி தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும். பரமலிங்கம்(அனலைதீவு), காலஞ்சென்ற பேரின்பநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்.

வேதநாயகம்(கண்ணன்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெனனி, ஜெனார்த்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிலஷன், அபிஷாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீவதனா(இலங்கை), ஸ்ரீவதனி(இலங்கை), ஸ்ரீரஞ்சினி(இலங்கை), ஸ்ரீகாந்(பிரான்ஸ்), ஸ்ரீறங்கன்(பிரான்ஸ்) ஸ்ரீகௌரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவகரன்(இலங்கை), ரவீந்திரன்(இலங்கை), பங்கையவதனி(பிரான்ஸ்), தயாழினி(பிரான்ஸ்), தயாபரன்(பிரான்ஸ்), கேதீஸ்வரி(இந்தியா), கேதீஸ்வரநாதன்(டென்மார்க்), சிவநாயகம்(நோர்வே), சிவகரன்(நோர்வே), சிவலிங்கம்(சுவிஸ்), அரிகரன்(கனடா), காலஞ்சென்ற மதிவதனி (இலங்கை), சிவகௌரி(நோர்வே), கலைவாணி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகாதேவா(இலங்கை), சத்தியவாணி(டென்மார்க்), குணரஞ்சினி(நோர்வே), விஜயநிர்மலா(நோர்வே), கமலவாணி(சுவிஸ்), ஜெயந்தினி(கனடா), ரவிச்சந்திரன்(நோர்வே), கமலகாசன்(நோர்வே) ஆகியோரின் அன்பு உடன் பிறவாத சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

 

வேதநாயகம் – கணவர்

 

வீடு

 

ஜெனனி – மகள்