April 19, 2024

நீர்வேலியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் – நீர்வேலியில் இன்று ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்வேலி வடக்கு பகுதியில் இன்று காலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துகொல்லப்பட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.