April 19, 2024

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் பிறந்தநாளில் கேக் வெட்டிய வழக்கிலேயே சிவாஜி கைது!

எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற பிடியாணையின் கீழ் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் பருத்தித்துறை நீதிவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்படவுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று கரும்புலி தினம் என்பதால், சிவாஜிலிங்கம் நிச்சயம் அஞ்சலி செலுத்துவார், அதை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் குற்றம்சுமத்தியுள்ளனர்.