April 25, 2024

பிரான்சில் யாழ் மல்லாகம் இளைஞர் கொரோனா தொற்றுக்குப் பலி!

 

பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

கொரோனா நோய் காரணமாக வைத்தியசாலையில் ஒரு மாதகாலம் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் (வயது 40 ) என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார் .

கொரோனாவின் ஆபத்து இன்னும் தொடர்கதையாகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.