April 19, 2024

நெடுந்தீவிற்கு வந்தவர் விடத்தல்பளையில்?

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் -நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்த போது நேற்று (02) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா அச்ச சூழ்நிலை நிலவிவரும் நிலையில் குறித்த இந்தியப் பிரஜை இவ்வாறு வந்துமுள்ளமை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் இன்று (03) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
இதையடுத்து குறித்த நபரை விடத்தல்பளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது