April 19, 2024

„“ யோகம்மா கலைக்கூடம்““ திலகேஸ்வரன் அவர்களின் எமது பாராட்டுக்கள்

திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் இளைஐயா அவர்களின் வாழ்த்துமடல்.
சுவிஸ்…..
அழகிய நகரம் முல்லைத்தீவில் புதன்கிழமை காலை புதிய கலாச்சார மண்டபம் ஒன்று „“ யோகம்மா கலைக்கூடம்““ எனற பெயரில் கோலாகலமாக ஆரம்பிக்கப்படுகின்றது.கனடாவில்பல ஆண்டுகள் வாழ்ந்து இயற்கை எய்திய தன் அன்பு அன்னையின் நினைவாக ஜெர்மனி நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் DJ music gp இன் அதிபரான வ.திலகேஸ்வரனின் முயற்சியில் தொடங்கப்படுகின்றது..முல்லை கலைஞர்களுக்கும் மக்களுக்கும் இந்த மண்டபம் பெரும்சொத்தாக அமையும் என நம்பலாம்.அமரர் யோகம்மா அவர்கள் லொசானில்எங்கள்அழைப்பின்பேரில் எங்கள்இல்லத்துக்கு தன் மகன்மருமகளுடன்பிள்ளைகளுடன் வந்திருந்தார்.அன்றைய நாள் ஒரு புனித நாள்.ஆடி அமாவாசை தினம். வீட்டின் பிரதான அறையில் எல்லோரும் அமர்ந்து மதிய உணவை வாழைஇலையில் ஒரு கோவில் மண்டபத்தில்உட்கார்ந்து உண்டமாதிரியாக அமைந்தது.அப்பொழுது எங்களுடன் உணவு உண்டஅந்த மகத்தான தாயார் பெயரில் இன்று இந்த நகரில் ஒரு கலைக்கூடம் திறப்பு விழா காண்கின்றது.எங்களுக்கும் பெருமையாக இருக்கின்றது. ஏனெனில் முல்லை நகர் நாமம் சொல்லும் ஒவ்வொரு தடவையும் யோகம்மா கலைக்கூடமும் சொல்லப்படும்.குறிப்பாக கலைஞர்களுக்கு பயிற்சிக்கூடமாயும் அவர்களின் படைப்புகள் அரங்கேறும் மண்டபமாயும் இன்று அங்குரார்பணம் செய்யபடுகின்றது.
வாழ்க பல்லாண்டு சிறப்புடன் வாழ்க. ! அன்புடன் VST films குத்துவிளக்கு கதாநாயகன் ஜெயகாந்த் ….சோமு…
திலகேஸ்வரன் அவர்களின் முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்
24.06.2020.♥