April 18, 2024

திறந்த அதே வேகத்தில் மூடப்பட்ட சுவிஸ் பாடசாலை,

சுவிட்சர்லாந்தில் பாடசாலை ஒன்றில் துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், திறந்த அதே வேகத்தில் தற்போது பாடசாலை மூடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் க்ளீன்பெர்க் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் இங்குள்ள துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,

பாடசாலைகள் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில், தற்போது க்ளீன்பெர்க் பகுதி பாடசாலை மூடப்பட்டது.

இதனிடையே குறித்த பாடசாலையில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் பேருந்து சாரதி ஒருவர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில்,

அனைத்து சோதனைகளும் eதிர்மறையாக வந்துள்ளது. இதனையடுத்து பாடசாலையை மூடுவது தேவையற்றது என்ற முடிவுக்கு நிர்வாகம் வந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு இலக்கான நபர் தற்போது கண்காணிப்பில் உள்ளதாக கூறும் மண்டல மருத்துவர், மண்டல நிர்வாகத்தின் பரிந்துரைகளின் படி பாடசாலை செயல்படலாம் என்றார்.