März 28, 2024

குண்டுவெடிப்பு:குடவத்தையில் ஒருவர் கைது?

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சக்தி குறைந்த வெடி குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் (ரிஐடி) இன்று (28) இரவு சற்றுமுன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துன்னாலை, குடவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் மற்றொருவரைத் தேடிச் சென்ற நிலையில் அவருடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னரே சந்தேக நபரின் கைது தொடர்பில் தகவல்களை வழங்க முடியும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.