April 19, 2024

கொரோனா:மயங்கியவர் யாழ்வைத்தியசாலையில்?

யாழ். அராலி துறைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (26) காலை நடந்துள்ளது.
குறித்த நபர் கண்டியிலிருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம், அராலிக்கு வந்துள்ளார்.பொது சுகாதார பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கு அமைய 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த நிலையில், இன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனால், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே முழங்காவலில் இருந்து கொரோனா பரிசோனைக்கென தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஏற்றி வந்தஅம்புலன்ஸ‘ யு-9 வீதியில் புத்தூர் சந்தியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.