இலங்கையில் ஊடரங்கு குறித்த புதிய அறிவிப்பு

இலங்கையில் ஊரடங்கு சட்டம்  நாளை, 26 செவ்வாய் முதல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி
வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென  ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.