März 29, 2024

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை

பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை.
பேராசிரியர் ஹூல் குறித்து விசாரணை நடைபெறுகிறது, ஆனால் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை.
தான் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறவில்லையெனவும் அது குறித்து பொலிசார் விசாரணை செய்கின்றார்களா என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்
ரட்ண ஜீவன் ஹூல் தெரிவித்தார்.
“சட்டதை மீறிய பேராசிரியர் ஹூல், விசாரிக்கிறது பொலிஸ்” என்ற தலைப்பில் 23ம் திகதி “லங்கா ஈ நீயூஸ்” மற்றும் பல இணையத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.டபில்யூ.எம். சேனாரத்ன, குறித்த விடயம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஆனால் பேராசிரியரிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.