April 23, 2024

முதல்நாள் போர்க்குற்ற நாள் மறுநாள் போர்வெற்றி நாள் – பனங்காட்டான்

இருபது வருடங்கள் ராணுவ அதிகாரியாகவும் பத்து வருடங்கள் ராணுவத்தை நெறிப்படுத்தி இனப்படுகொலை புரிந்த பாதுகாப்புச் செயலாளராகவுமிருந்த கோதபாய ராஜபக்ச, இப்போது சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ஜனாதிபதி பதவி வழியாக சுவை பார்க்க விரும்புகிறார். சிவில் நிர்வாப் பதவிகளுக்கு ராணுவத்தினரை நியமிப்பதும், சர்வதேச அரங்கை அச்சுறுத்தும் எச்சரிக்கைகளை வீசுவதும் வரப்போகும் பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக சிங்கள பௌத்த வாக்குகளை சுவீகரிக்க முனையும் ஓர் உத்தியா?

முள்ளிவாய்க்கால் என்பது புறமுதுகு காட்டாத நெஞ்சுர வீரர்களின் உறைவிடமென்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப்பட்டுள்ளது.