April 19, 2024

தென்னிலங்கையில் படையினர் குழப்பம்?

தென்னிலங்கையில் சும்மா இருக்கும் படையினர் மீண்டும் கட்டைப்பஞ்சாயத்துக்களில் குதித்துள்ளனர்.
மாரவில பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் இராணுவ வீரர்கள் இருவரை, மாரவில பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விருவரில் ஒருவரின் தந்தையை பொலிஸார் நேற்று (21) கைதுசெய்துள்ளதையடுத்து, இவர்கள் பொலிஸ் நிலையம் சென்று குழப்பம் விளைவித்துள்ளதுடன், சொத்துகளையும் சேதப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை, இன்று (22)  மாரவில நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.