März 29, 2024

என்னுக்குள்…

என்னுக்குள்
ஏகாந்தம்
வெறும் வெளிகளாகவே…
கண்ணுக்குள்
எழும் காவியங்கள்
கற்பனைகளாகவே..,
உள்ளுக்குள்
உண்மைகள்
உறங்கியும் உறங்காமலுமே…
வரிகளுக்குள்
வார்த்தைகள்
கட்டுக்குள் அடங்காமலே…
மண்ணுக்குள்
மறைந்திருக்கும்
வேர் போல் வேறாகவே…
தனிமையும்
தனித்துவமும்
ஒட்டியும் ஒட்டாமலுமே…
ஏற்றம்
மட்டும் எதிரொலிக்க
மாற்றங்கள்
ஏமாற்றமே..,
தடைகளை
தாண்டும் சுய
தேடலும் தொலைந்து
நீளும் வாழ்வு கொடிது.

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி