März 29, 2024

துயர் பகிர்தல் கொரோனாவால் பிரித்தானியாவில் உயிரிழந்த மற்றுமொரு யாழ் நபர்

பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் மற்றுமொரு யாழ். நபர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதீஸ்குமார் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் மனைவி கொரோனாவால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

எனினும் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களின் மரணங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.