März 29, 2024

உள்நாட்டு விமானங்கள் மே-25 முதல் படிப்படியாக சேவையைத் தொடங்கும் – மத்திய அரசு

400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், 2-ஆம் வகுப்பு ரயில்கள் 200-ஐ இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மே 25 முதல் விமான சேவை படிப்படியாக தொடங்கும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  தெரிவித்துள்ளார்.
எல்லா விமானநிலையங்களும், மே 25 முதல் தயார் நிலையில் வைக்கப்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், பயணிகள் பயன்பாடு குறித்து தனியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 400 சிறப்பு ஷ்ரமிக் ரயில்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், 2-ஆம் வகுப்பு ரயில்கள் 200-ஐ இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.