März 29, 2024

வெல்லும் பொழுதிற்காய் எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்!

வெல்லும் பொழுதிற்காய் காத்திருந்த எம் இனத்தை சிங்களப் பேரினவாத அரசோடு வல்லாதிக்க அரசுகளும் அணிசேர்ந்து அழித்தனவே! இன்று எமது தாய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கின்றோம். எம் தேசம் அழகிழந்து ஆண்டுகள் பதினொன்று உருண்டோடி விட்டன. இன்னும் அனைத்துலக நாடுகளின் மௌனம் கலையவில்லை. துயர் சுமந்த எம் இனத்தின் துயரம் முடியவில்லை. இன்றும் தொடர்கின்றது தமிழின அழிப்பின் மிச்சங்கள்.
„நேற்றைய வரலாறு தெரியாது போனால் இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது எம் வசம் இல்லை“ என்பதனை உணர்ந்து எமது வரலாறுகளை அறிந்து தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இளம் தலைமுறையினர் இனப்பற்றுடனும், ஆரோக்கியமான சிந்தனையுடனும் எம்மினத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும்!