April 20, 2024

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் பொங்கல் இம்முறை இல்லை!

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் பொங்கல் இம்முறை இல்லை!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவில் இம்முறை பக்தர்களை அனுமதிப்பதில்லையென முடிவாகியுள்ளது.

புகழ்பூத்த வற்றாப்பளை கண்ணகையம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா தொடர்பாக இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிசார், இராணுவத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

கொரோனா நிலவரத்தை அடிப்படையாக கொண்டு, இம்முறை ஆலய பொங்கல் திருவிழாவில் பொதுமக்களை அனுமதிப்பதில்லையென முடிவாகியது.

பக்தர்கள் வீடுகளில் இருந்து வழிபாடுகளில் ஈடுபடுமாறும், பொங்கல் திருவிழா இடம்பெறாமல், ஆலயத்தின் சம்பிரதாய கிரியைகள் மாத்திரம் இடம்பெறும் எனவும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது