März 29, 2024

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும்!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 30ம் திகதி வரை தலைமையகம் மூடப்பட்டிருக்குமென்பதை ஐ.நா அறிவித்தள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஐ.நா தலைமை அலுவலகம் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச்சில் நியூயோர்க்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஐ.நா தலைமை அலுவலகமும் மார்ச் 16ம் திகதி மூடப்பட்டது.

ஏப்ரல் 12ம் திகதி வரை மூடப்படுவதாக அப்போது அறிவிக்கப்பட்டதுடன், ஊழியர்கள் அனைவரும், வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததைஅடுத்து தலைமை அலுவலகம் மே 1 வரை மூடப்படுவதாக, ஐ.நா பின்னர் அறிவித்தது.

ஆனால், கொரோனா பரவலில் இருந்து, அமெரிக்கா இன்னும் மீளவில்லை. மேலும், உலகில், பெரும்பாலானா நாடுகள், கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளன. இதையடுத்து தலைமை அலுவலகம் மூடலை, ஜூன் 30 வரை ஐ.நா நீட்டித்துள்ளது.

இந்நிலையில், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வைரஸ் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் வெறுப்பை காட்டும் வகையிலும், ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், தகவல்கள் பரப்பப்படுவது, கவலைஅளிக்கிறது.

பயங்கரவாத மற்றும் நிறவெறி அமைப்புகள், வைரசால் ஏற்பட்டுள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, மக்களிடம் ஒற்றுமை உணர்வை அழிக்க முயற்சிக்கின்றன. இதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு, மத தலைவர்களுக்கு உள்ளது. மக்களிடம் ஒற்றுமையை அதிகரித்து, வைரஸ் ஒழிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.