März 29, 2024

எழுச்சி நாள்.

மனிதம்
மரித்த நாள்.
புனிதம்
பறிபோன நாள்.
கணிப்பு
கலைந்த நாள்…
கலகக்காரருடன்
உலம் கை கோர்த்த
கோர நாள்.
கொடிய யுத்தம்
முடிவுக்கு வந்த நாள்.
சிறுபான்மை
இனமொன்றின்
உறுதியை
குலைத்த நாள்..
எத்தனையோ நாடுகள்
எங்களை ஏமாற்றிய நாள்…
வல்லரசுகளின்
வளைப்புக்குள்
வதங்கிய நாள்.
பூக்களும் பிஞ்சுகளும்
காய்களும் கனிகளுமென
அழிந்த நாள்…
ஒற்றைத் தமிழனை
ஒன்பது நாடுகள்
ஒன்றாய் சேர்ந்து
ஓரம் கட்டிய நாள்.
வீரத் தமிழனின் தனித்துவம்
நிறைந்த நாள்..
வெள்ளைக்
காெடிகளுக்கு
கரி பூசிய கொடிய நாள்.
சரணடைதலின்
சாரம் மறந்த நாள்..
நிராயுத பாணிகளை
நிர்மூலம் செய்த நாள்.
கோர நாள் கொடிய நாள்
ஆனாலும் தமிழர் மனங்களில்
மறக்க முடியாத நாள்.
முள்ளி வாய்க்கால் என்றுமே
விழிப்பு நாள்..எழுச்சி நாள்..
கவிஞர் தயாநிதி