April 18, 2024

சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! – யாழில் சம்பவம்

சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ள பரபரப்பு யாழில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நல்லூர் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் இந்த உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.
இன்று (13) அதிகாலை முதல் அந்த இடத்தில் உருவப்பொம்மையை அவதானிக்க முடிகிறது.

நேற்று 8 மணிக்கு பின்னான ஊரடங்கு நேரத்திலேயே இந்த உருவப் பொம்மைய அவ்விடத்தில் இனந்தெரியாதோர் வைத்துள்ளனர்.
தமிழர்களின் போராட்டத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி வரும் சுமந்திரன் மீது மக்கள் மிகுந்த வெறுப்புடன் இருப்பது குறிப்பித்தக்கது.