April 19, 2024

யாழில் காவல்துறைக்கு தர்ம அடி?

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், இரட்டைப்புலவு வைரவர் ஆலயம் அருகே உள்ள வீட்டுக்கு இன்று (9/5) மதியம் சிவில் உடையில் சென்ற
பொலிஸாருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் காயம்  அடைந்துள்ளனர்.

குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே சில காலமாக முரண்டாடு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டிற்கு சாதாரண உடையில் சென்ற இரு பொலிஸார் அங்கு உரையாடிய பின்பு வேலி பாய்ந்து குறித்த வீட்டிற்குள் பிரவேசித்ததை அடுத்து அங்கு குழப்பம் நிலவியது.
வீட்டார் எழுப்பிய குரல் கேட்டு அயலில் உள்ள இளைஞர்களும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு இரு பகுதியினருக்கும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயத்துக்கு உள்ளாகி இருந்தார். அத்தோடு குறித்த வீட்டை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காயத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.