März 28, 2024

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் எதிர்வரும் 18..05.2020 அன்று நடைபெறும். என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது

கொவிட் 19(covid 19 )பரவல் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டு நடைமுறைகள் , சட்டங்கள் என்பவற்றிற்கு மதிப்பளித்து அவற்றைக் கடைப்பிடித்தபடி இந்நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூர் வளங்களை ஒன்றுதிரட்டிப் பயன்படுத்துவதன் மூலம் இந் நினைவேந்தல் எளிமையாகவும் உரியமுறைப்படியும் மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு நிதி திரட்டல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடாது.

இந்நினைவேந்தல் நடவடிக்ககைகள் தொடர்பில் அனைத்துப் பொது அமைப்புக்கள் ,பொதுமக்கள் அனைவரையும் இந் நினைவேந்தலுக்காய் எம்முடன் இணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதுடன் நினைவேந்தல் தொடர்பான நிகழ்சி ஒழுங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு. தெரிவித்துள்ளது.