März 28, 2024

கண்டுபிடித்துவிட்டோம்! கொரோனாவிற்கு இந்த மூலிகை மருந்து போதும்: செய்தியாளர்கள் முன் குடித்து காட்டிய மடகாஸ்கர் பிரதமர்…!!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக, மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக, உலகின் பல்வேறு நாடுகளில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் பல்வேறு சித்த, ஆயுர்வேத மருந்துகள் மூலம் இந்நோயை வராமல் தடுப்பற்கான எதிர்ப்பு சக்தியை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த தங்கள் நாட்டில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்று மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி 1,363 பேர் பேசுகிறார்கள்

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மடகாஸ்கர் தீவுகளில் காணப்படும் ஆர்டிமீசியா என்ற தாவரத்தில் இருந்து மலேரியாவுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த மருந்து கொரோனா நோயையும் அழிக்கும் திறன் பெற்றுள்ளது. இந்த புதிய மருந்துக்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. மலகாசி மருத்துவ ஆராய்ச்சி மையம் இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்று அந்நாட்டு தலைநகர் அந்தனநாரியோவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி விளக்கிய அதிபர் ஆன்ட்ரோ, புதிய மருந்தை குடித்தும் காண்பித்தார்.

மடகாஸ்கரில் கொரோனா நோய்த் தொற்றினால் இதுவரை 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அங்கு தற்போது வரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோவிட் ஆர்கானிக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக, WHO, எந்தவொரு மருந்துகளுடனும் சுய மருந்துகளையும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாகவோ அல்லது சிகிச்சையாகவோ உலகளாவிய அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்று கூறியுள்ளது.