März 28, 2024

கொரோனா பலியெடுப்பு 3 இலட்சம் நோக்கி!

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (04) காலை 11 மணி வரை 212 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 3,566,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 248,304 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,156,970 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 2,161,530 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன்  (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இவர்களில் 50,051 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

– அமெரிக்கா > 68,600
– இத்தாலி > 28,884
– பிரித்தானியா > 28,446
– ஸ்பெயின் > 25,264
– பிரான்ஸ் > 24,895
– பெல்ஜியம் > 7,844
– பிரேஷில் > 7,051
– ஜேர்மன் > 6,866
– ஈரான் > 6,203

காணப்படுகின்றன.