April 19, 2024

ஊரடங்கு நேரத்தில் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்! எங்கு தெரியுமா ??

ஊரடங்கு நேரத்தில் மர்மமாக காணமல் போன விலையுயர்ந்த கார்கள்! எங்கு தெரியுமா ??

அமெரிக்காவில் ஊரடங்கு நேரத்தில் தொடர்ந்து விலையுயர்ந்த கார்கள் காணமல் போய் கொண்டிருந்த நிலையில், அதை எல்லாம் திருடியது யார் என்பதை தெரிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா உள்ள போர்சித் கவுன்ட்டியில் அடிக்கடி பல விலை உயர்ந்த கார்கள் திருடு போயுள்ளது.

இதனால் இதுதொடர்பாக பொலிசாருக்கு பல புகார்கள் வந்துள்ளது, இருப்பினும் திருடன் குறித்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால், கார் திருடர்களை பிடிப்பதற்காக உளவுத்துறையினரை பொலிசார்முடுக்கிவிட்டனர்.

இதில்தான் திருட்டு கார் ஒன்றை மெகீல் பின்ஸ் என்ற 19 வயது பருவ சிறுவன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் காத்திருந்தது.

ஏனெனில் அனைத்து கார்களையும் திருடியது 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். இதில் 9 வயது சிறுவனும் உள்ளான்.

இவர்கள் ஆடி, போர்டு, ஹோண்டா, செவர்லே, லெக்சஸ், டோயோட்டா என்ற விலை உயர்ந்த கார்களை எல்லாம் சர்வசாதாரணமாக பூட்டை திறந்து திருடிச் சென்றுள்ளனர்.

ஊரடங்கால் தற்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருப்பதால், இந்த சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக சவால் விட்டு கார்களை திருடி உள்ளனர்.

அதாவது முதலில் குழுவாக சென்று ஒரு விலை உயர்ந்த காரை பார்ப்பார்கள். அதன் பின் அந்த காரை திருடுவதற்கு டாஸ் போட்டு ஆளை தெரிவு செய்வர்.

இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அவரிடம் கொடுத்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு காரை கொண்டு வரும் படி கூறிவிட்டு செல்வர்.

அங்கு வைத்து, காரை திருடி வரும் அந்த நபருக்கு ஹீரோ பட்டம் சூட்டுவார்கள். அத்துடன் அந்த காருடன் போட்டோ எடுத்துக் கொள்வார்கள்.

இப்படி பொழுதுபோக்கிற்காக இவர்கள் திருடிய 46 கார்களின் மதிப்பு, 8.36 கோடி ரூபாய், இந்த கும்பலில் இருந்தது மொத்தம் 19 பேர். கார் திருட்டுக்கு பின்னர் தங்களுக்கு பணம் தரும் நண்பர்களிடம், அந்த காரை தந்துவிடுவார்களாம். அப்படி காரை வாங்கியவன்தான் மெகீல் பின்ஸ்.

பிடிபட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்பதால், அவர்களை பொலிசார் கைது செய்யவில்லை. மாறாக திருட்டு கார்களை வைத்திருந்தது, ஊரடங்கு காலத்தை மீறி வெளியே வந்தது போன்ற சிறிய வழக்குகளை மட்டும் பதிவு செய்துள்ளனர்.

இதில் அபராதம் அதிகம் வரும். ஆனால், கைது இருக்காது. ஆனால், சிறுவர்களின் பெற்றோர்களிடம் விஷயத்தை கூறி, அவர்களை அடக்கி வைத்திருக்காவிட்டால், பெரும் பிரச்னைகள் உருவாகும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.