April 19, 2024

அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

அடையாள அட்டை நடைமுறை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் மட்டுமே தேசிய அடையாள அட்டை நடைமுறை பொருந்தும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் அடையாள அட்டை நடைமுறை அமுல்படுத்தப்படாது என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அடையாள அட்டை நடைமுறைக்கு அமைய, அடையாள அட்டையின் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட நாட்களில் வெளியே செல்ல முடியும்.

பாரிய மக்கள் கூட்டங்களைத் தடுக்கும் வகையில் அடையாள அட்டை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்றையதினம் முதல் கொழும்பு. கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அடையாள அட்டை நடைமுறை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.