April 19, 2024

யாழ் போதனாவில் மேலுமொரு கொரோனா?

முழங்காவில் தனிமை நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (01) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.